லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த 35 வயது பெண்! இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது
லண்டன் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த 35 வயதான பெண் Shakira Spencer.
தொடர் கைது நடவடிக்கையில் இறங்கி தீவிர விசாரணையில் பொலிசார்.
லண்டனில் உள்ள வீட்டில் 35 வயதான பெண் சடலமாக கிடந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Ealingல் தான் கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. Shakira Spencer (35) என்ற பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கிடந்தார். இது தொடர்பாக பொலிசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 25 வயதான ஆண், 37 மற்றும் 43 வயதான இரண்டு பெண்கள் என மூவரை கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர்கள் கைதானார்கள்.
தொடர்ந்து அவர்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதோடு குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்திருக்கலாம் என்ற அடிப்படையில் மற்றுமொரு இருவர் கைதானார்கள்.
Shakira SpencerIMAGE, SOURCE, MET POLICE
டிடெக்டிவ் அதிகாரி பிரயன் ஹோவி கூறுகையில், பிரேத பரிசோதனை முடிவையடுத்தே Shakira எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அவருக்கு யாரால் பிரச்சனை இருந்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
சம்பவம் தொடர்பாக எந்தவொரு தகவல் தெரிந்தாலும் அது குறித்து எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.