அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்... உடல் சிதறி பலியான பலர்: அரசின் கோர முகம் அம்பலம்
எத்தியோப்பியாவின் திக்ரேயில் உள்ள அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் 30 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியதாகவும் தொண்டு நிறுவன ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறார்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த தாக்குதல் நடவடிக்கையை எத்தியோப்பிய அரசாங்கம் மறுத்துள்ளது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் ராணுவ தளபதியும் அரசாங்க செய்தித்தொடர்பாளரும் உடனடியாக பதிலளிக்க மறுத்துள்ளனர். வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை உள்ளூர் அதிகாரிகளே வெளியிட்டுள்ளதாகவும் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
Dedebit நகரில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீதே இந்த வான்வழி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2020ல் இருந்தே எத்தியோப்பிய அரசு துருப்புக்கள் திக்ராயன் கிளர்ச்சியாளர்கள் படைகளுடன் போரிட்டு வருகின்றது.
திக்ரே பகுதியில் அக்டோபர் 18ம் திகதி முதல் முன்னெடுகப்படும் வான்வழி தாக்குதலில் இதுவரை 146 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 213 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
நீண்ட 14 மாதகால போருக்குப் பிறகு அரசியல் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு அரசாங்கம் உறுதியளித்த நிலையில், பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து இந்த வான்வழி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.