மனிதகுலம் அழிந்து உலகம் ரோபோட்களால் நிறையும்: 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler எச்சரிக்கை
Time traveler claiming to be from the year 4413: பிரித்தானியாவில் 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த Time Traveler என ஒருவர் தன்னை கூறுகிறார்.
சமீபத்தில் வெளிவந்த ஒரு விசித்திரமான பேட்டி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
லூயிஸ் வாக்கர் (Lewis Walker) என்ற நபர், தன்னை 4413-ஆம் ஆண்டிலிருந்து வந்த “Time Traveler” எனக் கூறியுள்ளார்.

அவரின் கூற்றுப்படி, 1977-இல் பிரித்தானியாவின் Ministry of Defence-இல் பணிபுரிந்தபோது, ரகசியமான Time Machine ஒன்றை சோதிக்க 2,50,000 பவுண்டு வழங்கப்பட்டது. 600 ஆண்டுகள் எதிர்காலத்திற்குச் செல்ல வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர் 4413-ஆம் ஆண்டில் விழித்தெழுந்ததாகக் கூறுகிறார்.
2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும்
அங்கு அவர் கண்ட காட்சிகள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்ததாகச் சொல்கிறார். வானில் பறக்கும் கார்கள் ரோபோட்களால் நிரம்பிய தெருக்கள் மிகக் குறைந்த மனிதர்கள் அவர் சந்தித்த ஒருவர், 2028-ஆம் ஆண்டிலிருந்து Time Travel பொதுமக்களுக்கு கிடைக்கும் என தெரிவித்ததாகவும் கூறினார்.
எச்சரிக்கை
மிகப் பெரிய எச்சரிக்கை ஆனால், வாக்கர் மிகப் பெரிய எச்சரிக்கையொன்றை வழங்கினார். மனிதர்கள் தொழில்நுட்பத்துடன் இணைந்து, இறுதியில் “மனிதகுலம்” அழிந்து, ரோபோட்கள் மட்டுமே நிறைந்த உலகமாக மாறும் என கூறினார்.
இந்தக் கூற்றுகள் உண்மையா, கற்பனையா என்பது தெரியவில்லை. ஆனால், மனிதர்கள் தொழில்நுட்பத்தில் அதிகமாக சார்ந்திருக்கும் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கும் வகையில் இந்தக் கதை பரவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |