கோபம் மறந்து உறவு பாராட்டும் ஒரு தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்த பிரித்தானிய இளவரசியின் மகள்
மன்னர் சார்லசுடைய தம்பியான ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்கள், சிறுமிகள் வாழ்வை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, முற்றிலுமாக ராஜ குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
விடயம் என்னவென்றால், அவரால், அவரது பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் கூட மன்னரை விட்டு சற்று விலகியே நிற்கும் நிலை உருவானது.
மன்னருக்கும், இளவரசர் ஹரிக்கும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது அளவு கடந்த அன்பு உண்டு. இருந்தும், ஆண்ட்ரூவால் அந்த உறவில் சற்று பிரிவு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசியின் மகள் செய்த நல்ல விடயம்
இளவரசி யூஜீனி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவர் தனது மூன்றாவது குழந்தையை கருவில் சுமக்கிறார்.

இந்நிலையில், மன்னரின் உறவினர் ஒருவர், யூஜீனிக்கும் மன்னருக்கும் இடையிலான பிரிவை குறைக்கும் வகையிலான ஒரு விடயத்தைச் செய்துள்ளார்.
ஆம், தான் கர்ப்பமாக இருப்பதை, தன் பெரியப்பாவான மன்னர் சார்லசுக்கு தெரியப்படுத்தவேண்டும் என யூஜீனியை வற்புறுத்தியுள்ளார் அவர்.
அவர் வேறு யாருமல்ல, மன்னர் சார்லசின் தங்கையான இளவரசி ஆனுடைய மகளான ஸாரா டிண்டல்தான் அவர்.

தன் சகோதரி மகளான ஸாரா மீதும் மன்னருக்கு அளவு கடந்த பாசம் உண்டு. பிரித்தானிய ராஜ குடும்பத்திலேயே மன்னர் தோள் மீது கைபோட்டுக்கொள்வதும், அவருக்கு பொது இடத்தில் கூட முத்தமிடுவதும் இந்த சாரா மட்டும்தான் என பிரித்தானிய ஊடகங்கள் எழுதுவதுண்டு.
இந்த ஸாராவும் யூஜீனியும் மிகவும் நெருக்கமானவர்கள். ஆக, தான் கர்ப்பமாக இருப்பதை உலகுக்குத் தெரியப்படுத்தும் முன், தனிப்பட்ட முறையில் கடிதம் மூலம் மன்னருக்குத் தெரிவிக்குமாறு ஸாரா யூஜீனியை வற்புறுத்தியுள்ளார்.
அதன்படி ஈஸ்டர் வாழ்த்து அட்டையுடன், ஒரு கடிதத்தையும் கைப்பட எழுதி, தான் கர்ப்பமாக இருப்பதை மன்னர் சார்லசுக்கு தெரியப்படுத்தியுள்ளார் யூஜீனி.
விடயம் என்னவென்றால், யூஜீனி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், மன்னர் முதல் ராஜ குடும்பத்தினர் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனராம்.
ஆக, ஸாராவின் முயற்சியால், மீண்டும் யூஜீனிக்கு மன்னர் மற்றும் ராஜ குடும்பத்தினரின் அன்பு கிடைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |