டைட்டன் நீர்மூழ்கியில் ஐந்து பேர் பலியான பின்பும் ஓஷன்கேட் நிறுவனம் செய்யும் அடாவடி
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக டைட்டன் என்னும் நீர்மூழ்கிக்கப்பலில் சென்ற ஐந்துபேர் உயிரிழந்த நிலையிலும், அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குச் சொந்தமான ஓஷன்கேட் நிறுவனம் அடாவடிச் செயல் ஒன்றை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஐந்துபேரை பலிகொண்ட டைட்டன்
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிக்கிடக்கும் டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக டைட்டன் என்னும் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பல குறைபாடுகள் கொண்ட அந்த நீர்மூழ்கி, உள்பக்கமாக வெடித்து, அல்லது கடலில் ஆழத்தின் அழுத்தத்தால் நசுங்கி சிதைந்து, அதனுள்ளிருந்தவர்களின் உயிரைக் குடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் மேற்கொண்டுவருகின்றன.
ஓஷன்கேட் நிறுவனம் செய்யும் அடாவடி
அந்த கோர சம்பவம் நிகழ்ந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில், உறவினர்களை இழந்தவர்களின் துக்கம் கூட ஆறாத நிலையிலும், டைட்டன் நீர்மூழ்கிக்கு சொந்தமான ஓஷன்கேட் நிறுவனம், மீண்டும் அடுத்த ஆண்டில் இரண்டு ஆழ்கடல் சுற்றுலாக்களை மேற்கொள்ள இருப்பதாக விளம்பரம் செய்துள்ளது.
ஓஷன்கேட் நிறுவனத்தின் இணையதளத்தில், அடுத்த ஆண்டு ஆழ்கடல் சுற்றுலா செல்வதற்கான இரண்டு திகதிகளைக் குறிப்பிடும் விளம்பரங்கள் இன்னமும் காணப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |