பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்? இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு
பிரித்தானிய பிரதமராக பதவி வகித்துவரும் கெய்ர் ஸ்டார்மர், பதவி விலகுவதைக் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவி விலகுகிறாரா பிரித்தானிய பிரதமர்?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என அவர் சார்ந்த லிபரல் கட்சிக்குள்ளேயே குரல்கள் வலுவாக ஒலித்துவரும் நிலையில், அவருக்கு போட்டியாளராக உருவாகியுள்ள ஆன்டி பர்னாம், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுவிட்டார்.

ஆக, ஸ்டார்மர் பதவி விலகும் ஒரு நிலை உருவாகியுள்ளது. ஆனால், அவர் அமைதியாக பதவி விலகுவாரா அல்லது ஆன்டிக்கு சவால் விட்டு போட்டி போட்டு விலகுவாரா என்பதுதான் கேள்வி.
இந்நிலையில், ஸ்டார்மர் ஆன்டிக்கு சவால் விடுவாரானால், ஆன்டியை ஆதரிக்க ஒரு பெரும் கூட்டம் தயாராக உள்ளது.
எனவே, ஸ்டார்மர் தாமாக முன்வந்து தனது ராஜினாமா குறித்த திட்டங்களை வெளியிடுவதுதான் நல்லது என கட்சிக்குள் ஒரு கருத்து நிலவுகிறது.
இதற்கிடையில், இன்று தனது ராஜினாமா குறித்த திட்டங்களை ஸ்டார்மர் வெளியிடக்கூடும் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பதவிக்கு ஆன்டி தயாரா?
விடயம் என்னவென்றால், மான்செஸ்டர் மேயராக பணியாற்றி வந்த ஆன்டி, நாட்டை ஆள இன்னும் தயாராகவில்லை என அவரது அணியினரே கருதுகிறார்கள்.

அதாவது, ஒரு மேயராக உள்ளூர் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திவந்த ஆன்டி, மொத்த பிரித்தானியாவையும் ஆள்வதற்காக, கொள்கைகளை உருவாக்கவும், அமைச்சர்களாக பதவி வகிக்க ஒரு அணியையும் தயார் செய்யவேண்டியுள்ளது.
அதற்கு அவருக்கு கால அவகாசம் வேண்டும். ஆக, செப்டம்பர் வரை ஸ்டார்மரே பிரதமர் பதவியில் நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், தனது திட்டம் என்ன என்பது குறித்து ஸ்டார்மர் இன்று அறிவிக்கக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |