"அப்பா போகாதீங்க பா" இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் புறப்படுவதற்கு முன்பு தந்தையிடம் கெஞ்சிய பிஞ்சு குழந்தை! நெஞ்சை உருக்கும் வீடியோ
இந்தோனேசிய ராணுவ நீர்மூழ்கிக் கப்பலில் மூழ்கி பலியான ஒரு கடற்படை வீரரின் குழந்தை, அவர் வீட்டிலிருந்து புறப்படும் போது, தன்னை விட்டு எங்கும் போகவேண்டாம் என கெஞ்சிய வீடியோ தற்போது வெளியாகி நெஞ்சை உரையச் செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலி தீவின் அருகே உள்ள கடற்பகுதியில் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான KRI Nanggala-402 ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று எந்திர கோளாறு காரணமாக கடற்பரப்புக்கு மேல் வர முடியாமல், கடலுக்குள் மூழ்கி பெரும் விபத்துக்கு உள்ளானது.
அதில் பயணித்த 53 கடற்படையினரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த கோர விபத்தில் பலியான வீரர்களில் ஒருவரான 29 வயது Imam Adi (First Lieutenant), இந்த கப்பலில் புறப்படுவதற்கு முன்பு, அவருடைய 2 வயது மகனுடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், அந்த குழந்தை தனது தந்தையை வெளியே செல்ல அனுமதிக்காமல், தன்னுடன் இருக்கும்படி கெஞ்சி போராடியுள்ளது. இந்த காட்சி பார்ப்போரின் மனதை நெகிழ வைக்கிறது.
இதுவே தந்தை மகன் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட கடைசி வீடியோ என Imam Adi-யின் தந்தை Edy Sujianto கூறினார்.
மேலும், தனது பேரன் இப்படி நடந்துகொள்வது இதுவே முதல் முறை என்றும், எப்போதும் Adi புறப்படுவதாக கூறினால் எந்த தொல்லையும் செய்யாமல் வழி அனுப்பி வைக்கும் குழந்தை, இந்த முறை இப்படி அடம் பிடித்து தந்தையை தடுத்தது விசித்திரமாக உணர்ந்ததாகவும் Sujianto கூறினார்.