பிரித்தானியாவில் ஜன்னலில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன்: பொலிஸார் வழங்கிய முக்கிய தகவல்
பிரித்தானியாவில் ஜன்னல் மாடியில் இருந்து 2 வயது குழந்தை கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை
சனிக்கிழமை மாலை பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஆஷ்டன் -ஆண்டர்-லைன் பகுதியில் அமைந்துள்ள மாடி வீடு ஒன்றின் ஜன்னலில் இருந்து 2 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 5.40 மணிக்கு பட்டர்மியர் சாலையில் இந்த சம்பவம் நடந்ததை அடுத்து குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது வரை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய செயல்கள் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |