டோங்காவை தாக்கிய சுனாமி அலைகள்! நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோவில் கடலுக்கடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தால் அங்கு சுனாமி அலைகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்துள்ளதாகவும் சுனாமி போன்ற பெரிய அலைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக டோங்கோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, `சுனாமி எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Breaking: A tsunami warning is in effect for the island of Tonga after a volcanic eruption. A video shows a possible tsunami wave hitting the island. pic.twitter.com/rCarK7ShD8
— PM Breaking News (@PMBreakingNews) January 15, 2022