ஸ்பெயின் நகரங்களை மூழ்கடித்தப் பேய் மழை... சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
Torrential rain sparks deadly floods in Spain: ஸ்பெயினில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் முழுவதும் பெய்த கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் வெள்ளப்பெருக்கையும், கடுமையான ஆபத்து குறித்த அவசர எச்சரிக்கைகளையும் தூண்டியுள்ளது.
வெள்ளப்பெருக்கு
ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவு மிக வெப்பமான கோடைக்காலம் முடிந்து சில வாரங்களிலேயே, நாட்டை மூழ்கடித்த பயங்கரமான பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பெனிடார்ம், இபிசா மற்றும் மகாலாஃப் போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் கனமழையால் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், வரும் நாட்களில் ஸ்பெயின் மேலும் பல வெள்ளப்பெருக்குகளைச் சந்திக்கவுள்ளது என்றே கூறுகின்றனர்.
பயங்கரமான இடியுடன் கூடிய மழையில் சிக்கிய பொதுமக்களை மீட்க அவசரகாலப் பணியாளர்கள் முயற்சிப்பதை பல்வேறு காணொளிக் காட்சிகள் காட்டின.
ஸ்பெயினின் பலேரிக் தீவுகளில் பலவற்றிற்கு ஆரஞ்சு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையன்று, பயங்கரமான அலைகள் கட்டலோனியா மற்றும் வலென்சியாவைத் தாக்கின.
30 நிமிடங்களில் இவ்வளவு அதிக அளவிலான மழைப்பொழிவை மிக அரிதாகவே பார்த்துள்ளதாக ஸ்பெயினின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையன்று ஐபீரிய தீபகற்பத்தின் தென்கிழக்கு பகுதி முழுவதும் கடுமையான மழை மற்றும் வெள்ளம் குறித்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கைகள் வியாழன் முழுவதும், சில சமயங்களில் வெள்ளிக்கிழமை வரையிலும் நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பார்சிலோனாவில் உள்ள மெட்ரோ நிலையங்களும் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது; அதேவேளையில், வலென்சியாவில் அனைத்து சுரங்கப்பாதை ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.

கட்டலோனியா மற்றும் வலென்சியாவில் வசிப்பவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். தெருக்கள் சேற்றுப் பகுதிகளாக மாறின; மேலும் வலென்சியாவில் 12 விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதால் பயணங்களில் கூடுதல் குழப்பம் ஏற்பட்டது.
வலென்சியாவில், இந்த வாரத்தில் இதுவரை வானிலை தொடர்பான சுமார் 500 புகார்கள் அவசர சேவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.