இரண்டு லொரிகளுக்கிடையே சுசுங்கி உயிரிழந்த ஒட்டு மொத்த குடும்பம்! பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
பிரேசிலில் இரண்டு லொரிகளுக்கிடையே கார் சிக்கி விபத்துக்குள்ளானதால், அதில் இருந்த அனைவருமே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரேசிலின் Santa Maria do Para-வில் உள்ள BR-316 மோட்டார் பாதையில் இரண்டு லொரிகளுக்கிடையே கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
இதனால் கார் உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள் உட்பட மொத்த 5 பேர் சம்பவ இடத்திலே நசுங்கி பலியாகியுள்ளனர். இதில் ஒரு லொரி சிமெண்ட் ஏற்றி வந்த லொரி என்பது தெரிகிறது.
ஆனால் இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதில் உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் கணவன் மற்றும் மனைவி எனவும், அவர்களின் பெயர் Marcio மற்றும் Dina Ramos de Souza எனவும், மற்றொருவர் இவர்களின் மருமகள் எனவும் அவரின் பெயர் Kethenen Wenil(14) என்றும், இறந்த இரண்டு குழந்தைகளும் அவர்களின் குழந்தைகள் தான் என்பதும், அவர்களுக்கு இரண்டு முதல் மூன்று வயதிற்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இவர்களின் உடல்கள், அவர்களின் சொந்த ஊரான Braganca-வில் புதைக்கப்பட்டதாகவும், இது தொடர்பான சிசிடிவி காட்சியிலே இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பொலிசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.