சுற்றுலா செல்வதற்கு கட்டணமா? சர்ச்சைக்குரிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் பிரபல நாடு
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து சுற்றுலா கட்டணம் வசூலிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸில் பெரிதாக பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலாவும் ஒன்று. இதனால் சுற்றுலா துறையை மேம்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தாய்லாந்தில் சுற்றுலா கட்டணம் என்ற புதிய திட்டத்தை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. சுற்றுச்சூழல் நட்பு சுற்றுலாவில் கவனம் செலுத்தும் விதமாக தாய்லாந்து அரசு சுற்றுலா பயணிககளுக்கு 500 baht (இலங்கை மதிப்பில் ரூ.2,947.71) வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
கொரோனா தீவிரமாக பரவி வருவதால் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே தாய்லாந்தில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் சுற்றுலாத் துறையை மீண்டும் புதுப்பிக்க தாய்லாந்தின் முயற்சிகளை இந்த நடவடிக்கை சிக்கலாக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய ஆளுநர் தரமான சந்தையை உருவாக்க சுற்றிலா பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம். எனினும் இந்த கூடுதல் செலவு சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தாய்லாந்தில் நவம்பர் 1 முதல் பாங்காக், சியாங் மாய், ரனோங் மற்றும் சோன் புரி ஆகிய இடங்களில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை வரவேற்க திட்டமிட்டுள்ளது.
ஆனால் சுற்றுலா துறையை மேம்படுத்த சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் திட்டம் எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது குறித்து தெரியவில்லை.