உறைபனியில் காருக்குள் சிக்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள்! பிரபல நாட்டில் பெருந்துயரம்
பாகிஸ்தானில் மலைபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றவர்கள் உறைபனியில் காருக்குள்ளே சிக்கி உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட பாகிஸ்தானில் உள்ள Murree நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் Sheikh Rashid Ahmed கூறியதாவது, கடந்த 15-20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, முதல் முறையாக அதிக படியான சுற்றுலா பயணிகளில் Murree-வில் குவிந்ததால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
கிட்டதட்ட 1000 வாகனங்கள் மலைபிரதேசத்தில் சிக்கியுள்ளன, அவரவர் காருக்குள்ளே சிக்கி சுமார் 16 முதல் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என Sheikh Rashid Ahmed உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், மீட்பு பணிக்கு உதவ இராணுவம் மற்றும் துணை இராணுவப் படை வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளதாக கூறினார்.
வெள்ளிக்கிழமை, Murree மலைபிரதேசத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளையும் மூடுவதாகவும், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது.
சுற்றுலா பயணிகள் உயிரிழந்த தகவலை கேட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மற்றும் இனியும் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரியுள்ளார்.
பனிபொழிவை ரசிக்க சுமார் 1லட்சம் வாகனங்கள் மலைபிரதேசத்திற்கு பயணித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு குறித்து Maryland UCH பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் துறையின் தலைவர் டாக்டர். Faheem Yonus கூறியதாவது, CO மணமற்றது, கார் பனியில் புதைந்தால் அது உயிருக்கு ஆபத்தானது, பயணிகள் CO சுவாசிக்கும்போது விரைவாக உயிரிழக்கலாம் என தெரிவித்துள்ளார்.