லெபனானில் கடலில் விழுந்து மாயமான விமானம்! தேடும் பணி தீவிரம்
மத்திய கிழக்கு நாடான லெபனானில் சிறய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தரைக்கடல் விழுந்து விபத்துக்குள்ளான விமானம், லெபனான் ஏவியேஷன் கிளப்-க்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
குறித்த விமானத்தில் இரண்டு பேர் பயணித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலில் விழுந்து மாயமான விமானத்தையும், அதில் பயணித்தவர்களையும் தேடும் பணியில் சிவில் பாதுகாப்பு குழு ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Bassam Mawlawi தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.