பல அடி உயரத்தில் கணவருடன் சாகசம் செய்த மனைவிக்கு நேர்ந்த துயரம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
சீனாவில் சர்க்கஸ் கலைஞரான பெண்ணொருவர் சாகஸத்தின்போது கணவர் கண் முன்னே கீழே விழுந்ததில், பலத்த அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கஸ் தம்பதி
ஷாங்காய் மாகாணம் சுஹோவைச் சேர்ந்த சர்க்கஸ் கலைஞர் தம்பதி சுஹொங்க் மவ்மவ் மற்றும் சன் மவ்மவ். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அந்தரத்தில் கயிற்றில் தொங்கியபடி சாகசம் செய்வதில் வல்லவர்களான இந்த தம்பதி, ஹொவ்ஹா என்ற கிராமத்தில் நடந்த சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது.
சாகசத்தின்போது விபரீதம்
சுஹொங்க் தனது உடலில் கயிற்றை கட்டிய படியும், அவரது மனைவி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமலும் சாகசத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்தரத்தில் தொங்கியபோது, தன் மனைவியை கால்களால் பிடிக்க சுஹொங்க் தவறியதால், பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பரிதாப பலி
அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பலத்த காயமடைந்த சன் மவ்மவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு இன்றி சர்க்கஸ் நடத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதித்தது.
@BBC