இலங்கை பயணம் தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கை...
பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், அத்தியாவசியத் தேவை இருந்தாலொழிய இலங்கைக்குப் பயணிக்கவேண்டாம் என பிரித்தானியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சூழலை கருத்தில் கொண்டு, நேற்று இந்த பயண ஆலோசனையை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மக்கள் உணவு, உரம், மருந்துகள் மற்றும் எரிபொருள் ஆகிய அத்தியாவசிய பொருட்களுக்கு பணம் செலுத்த கஷ்டப்படும் ஒரு சூழல் இலங்கையில் காணப்படுகிறது என்று கூறியுள்ள பிரித்தானிய அரசு, ஆகவே, அத்தியாவசியத் தேவை இருந்தாலன்றி, இலங்கைக்குப் பயணிக்கவேண்டாம் என தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.