கண்டிப்பாக இதற்கு தடை..! போர்நிறுத்தம், மக்களை வெளியேற்றுவது குறித்து உக்ரைன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Evacuation
Putin
Zelensky
UkraineRussiaWar
Mariupol
CeaseFire
By Basu
தற்காலிக போர்நிறுத்தத்தின் போது மக்கள் அறிவிக்கப்பட்டுள்ள பாதைகளை தவிர வேறு பாதையில் பயணிக்க தடை விதிக்கப்படுவதாக உக்ரைன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
உக்ரைனின் Mariupol மற்றும் Volnovakha நகரங்களை விட்டு மக்கள் வெளியேற அனுமதிக்கும் விதிமாக இரண்டு நகரங்களில் ரஷ்ய தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தள்ளது.
Mariupol நகரில் 4,40,000 மக்களும், Volnovakha நகரில் 21,000 மக்களும் தண்ணீர், மின்சாரம் வசதியின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களை வெளியேற்றுவது குறித்து Mariupol நகர சபை முக்கிய தகவல்களை அறிவித்துள்ளது.
- அதாவது, போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும்.
- மக்களை வெளியேற்றும் பணிகள் காலை 11.00 மணி முதல் தொடங்கும்.
- பாதை Mariupol-வில் இருந்து Nikolske - Rozivka - Pologi - Orikhiv வழியாக மேற்கு நோக்கி நகரமான Zaporizhia வரை உள்ளது.
- நகரில் உள்ள 3 பகுதிகளிலிரு்நது பேருந்துகள் புறப்படும் மற்றும் அறிவிக்கப்பட்டுள்ள பாதையில் தனியார் போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
- பேருந்து ஓட்டுநர்கள் முடிந்த வரை மக்களை ஏற்றிச்செல்லுமாறு நகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.
-
அறிவிக்கப்பட்ட பாதையிலிருந்து வேறு பாதையில் செல்ல கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது என Mariupol நகர சபை அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US