ராணியின் இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டியுடன் காவலாக சென்ற சிப்பாய் மர்ம மரணம்
குதிரைப்படை வீரர் ஜாக் பர்னல்-வில்லியம்ஸ், 18, இந்த மாத தொடக்கத்தில் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
அவர் புதன்கிழமை பிற்பகல் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹைட் பார்க் பாராக்ஸில் இறந்து கிடந்தார்.
மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில், அவரது சவப்பெட்டியின் அருகே நடந்து சென்ற 18 வயது காவலாளி, ராணுவ முகாமில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
குதிரைப்படை சிப்பாயான ஜாக் பர்னெல்-வில்லியம்ஸை காப்பாற்றும் முயற்சியில் அவசர சேவைகள் நைட்ஸ்பிரிட்ஜில் உள்ள ஹைட் பார்க் பாராக்ஸிற்கு அழைக்கப்பட்டன. ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் எதிர்பாராதது என்றும், விசாரணைக்குப் பிறகு, "சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை" என்றும் லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவர் எப்படி, எதனால் இறந்தார் என்பது தெளிவாக தெரிவிக்க்கப்படவில்லை.
இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அந்த படையின் செய்தி தொடர்பாளர் கூறினார்.
சவுத் வேல்ஸில் உள்ள பிரிட்ஜெண்டைச் சேர்ந்த ஜாக்கின் குடும்பத்தினர், நாளை அவரது நினைவாக நீல பலூன்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் ராணியின் இறுதிச் சடங்கில், அவரது சவப்பெட்டியை அதன் இறுதிப் பயணத்தில் அவர் பாதுகாத்தார்.
"ராணியின் இறுதிப் பயணத்தில் ராணிக்காக தனது கடமையைச் செய்கிறார்" என்று அவரது பெற்றோர் பெருமையுடன் அறிவித்தனர்.
Images: Dailymail