அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை... கசிந்த தகவல்களால் கடும் கோபத்தில் ட்ரம்ப்
அமெரிக்காவிடம் போருக்குத் தேவையான ஆயுதங்கள் மொத்தமும் தீர்ந்துவிட்டதாக வந்த செய்திகளால் ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இருக்கும் அமெரிக்க ஆயுதக் கையிருப்பு குறித்த தகவல்கள், ஒரு முக்கியமான கட்டத்தில் அமெரிக்காவை பலவீனமாகக் காட்டுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் கவலை தெரிவித்துள்ளார்.
திகைத்துப்போகவில்லை
ஈரானை ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளச் செய்வதற்காக, அவர் வலுவான இராணுவ நடவடிக்கை எடுக்க இருப்பதாக தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்த நிலையிலேயே, ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த வாரம் கேம்ப் டேவிட்டில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த விவாதம் முக்கிய இடத்தைப் பிடித்தது. ஈரான் போரில் சிக்கி ஏற்கனவே விரக்தியடைந்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம் தற்போது ஆயுதங்கள் இல்லை என்ற ஊடகங்களின் செய்தி தொடர்பில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், ஆயுதங்களின் பற்றாக்குறை தொடர்பான சாத்தியமான பிரச்சனைகள் குறித்து ட்ரம்ப் பல மாதங்களாக நன்கு அறிந்திருந்தார் என்றும், வெளியாகியுள்ள அறிக்கைகளால் அவர் திகைத்துப்போகவில்லை என்றும் பலர் கூறியுள்ளனர்.
இருப்பினும், போரின் ஒரு திருப்புமுனையான கட்டத்தில் அந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்ததாலும், அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் அளிப்பதன் பின்னணியில் அதன் பலவீனமான நிலை என்பது அம்பலப்படுத்தப்பட்டதாலும் அவர் கோபமடைந்தார் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பதிவிட்டுள்ள ட்ரம்ப், அமெரிக்காவிடம், குறிப்பாக சில குறிப்பிட்ட வகைகளில், பெருமளவிலான ஆயுதங்கள் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.
மேலும், தேவைக்கேற்ப அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பவும் தயார் நிலையில் பல நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்படுகின்றன எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஆயுதங்கள் இல்லை என்பது தொடர்பில் பரவி வரும் தகவல்களில் குறைந்தபட்சம் சிலவாவது துல்லியமானவை என்பதை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவே கூறப்படுகிறது.
அந்தத் தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்குத் தனது நிர்வாகம் நீண்டகால சிறைத் தண்டனைகளை கோரும் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இதுவரை, ட்ரம்பின் கோபம் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் மீது குறிப்பாகத் திரும்பவில்லை என்றே வெள்ளை மாளிகை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஈரான் போருக்கு முன்னர் அமெரிக்காவிடம் சுமார் 2,200 பேட்ரியாட்ஸ் ஏவுகணைகளும் 452 தாட் ஏவுகணைகளும் அதன் கையிருப்பில் இருந்தன. ஆனால் அதில் தற்போது பெரும்பகுதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
கையிருப்புப் பற்றாக்குறை
அமெரிக்காவிடம் ஆயுதங்கள் இல்லை என கசிந்துள்ள தகவல், அமெரிக்க அதிகாரிகளை மட்டுமல்ல வளைகுடா நாடுகளின் தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய மோதலைத் தீவிரப்படுத்த ட்ரம்ப் முடிவு செய்தால், வான் பாதுகாப்பு அமைப்புகளின் பற்றாக்குறை, ஈரானின் சாத்தியமான பதிலடித் தாக்குதலைத் தடுக்கும் வளைகுடா நாடுகளின் திறனைப் பாதிக்கக்கூடும்.
மத்திய கிழக்கு நாடுகளில் பல, அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சார்ந்துள்ளன. கையிருப்புப் பற்றாக்குறையானது, ஈரானிடமிருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறிக்கும் தங்களின் திறனைத் தடுக்கக்கூடும் என்பதை வளைகுடாத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மீண்டும் அமெரிக்கத் தாக்குதல்கள் நடந்தால், பிராந்தியம் முழுவதும் இருளில் மூழ்கும் அல்லது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் வளைகுடா நாடுகளுக்குத் தெரிவித்துள்ளது.
ஆயுதங்கள் இல்லை என்ற தகவல் பரவிவரும் நிலையில், கடந்த வாரம் ட்ரம்ப், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவின் தலைவர்களுடன் போர் குறித்து விவாதித்துள்ளார்.
ஆயுதங்கள் இல்லை என்பது குறித்து வெளிவரும் தகவல்களால் ட்ரம்ப் கோபமடைந்துள்ள நிலையில், இந்தத் தகவல்கள் நிர்வாகத்திற்குள் இருக்கும் போர் எதிர்ப்பு அதிகாரிகளிடமிருந்து கசிந்திருக்கலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் நம்புகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |