மன்னர் மிகவும் பாதுகாப்பாக இருப்பார் - ட்ரம்ப் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்க பயணத்தின் போது மிகவும் பாதுகாப்பாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வாஷிங்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, வெள்ளை மாளிகை மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை இடையே கூடுதல் பாதுகாப்பு ஆலோசனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, "வெள்ளை மாளிகை வளாகம் மிகவும் பாதுகாப்பானது. மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இங்கே சில நாட்கள் தங்க உள்ளனர்” என்று CBS நிகழ்ச்சியில் ட்ரம்ப் கூறினார்.
இந்த நான்கு நாள் பயணத்தில், மன்னர் மற்றும் ராணி, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப் ஆகியோரை சந்தித்து, சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

மன்னர் சார்லஸ், அமெரிக்க காங்கிரஸில் உரையாற்ற உள்ளார். இது, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மேலும், நியூயார்க் 9/11 நினைவிடத்தில் இருவரும் மரியாதை செலுத்த உள்ளனர்.
பிரித்தானியா தூதர் சர் கிறிஸ்டியன் டர்னர், “இந்த பயணம் இரு நாடுகளின் நட்பை புதுப்பிக்கும்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் சில அரசியல் கட்சிகள், ட்ரம்ப் “நம்பகமற்ற கூட்டாளி” என விமர்சித்து, பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |