ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்ட டொனால்ட் டிரம்ப்: பின்னணி காரணம்?
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் -ஜி ஜின்பிங் தொலைபேசி உரையாடல்
பல்வேறு உலக நடப்புகள் மற்றும் இருநாட்டு உறவு முன்னேற்றம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளம் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட பதிவு, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் இப்போது தான் தொலைபேசி வாயிலாக பேசி முடித்தேன். இருவரும் பல முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.

குறிப்பாக ஏப்ரம் மாதம் நான் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பது குறித்தும், தைவான், உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம், அமெரிக்க எண்ணெய் எரிவாயு கொள்முதல், வர்த்தகம், ராணுவம் போன்ற முக்கியமான உலக விவகாரங்கள் குறித்தும், இருநாட்டு உறவும் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சோயாபீன் இறக்குமதியை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது மற்றும் விவசாய பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது, விமான எஞ்சின் விநியோகங்கள் போன்ற முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என்றும் டிரம்ப் விவரித்துள்ளார்.

ஜி ஜின்பிங் உடனான சிறந்த உறவு
மேலும் சீனா உடனான உறவு மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் உடனான தன்னுடைய தனிப்பட்ட உறவு ஒரு சிறந்த ஒன்றாகும். இதை காப்பது எவ்வளவு முக்கியம் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும்.
என்னுடைய ஆட்சி காலம் மீதமுள்ள அடுத்த 3 ஆண்டுகளில் பெய்ஜிங் உடனான உறவில் பல நேர்மறையான விஷயங்கள் நடைபெறும் என நம்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |