இஸ்ரேலுக்கு டிரம்ப் அளித்த உறுதிமொழி: இறுதி கட்டத்தை நெருங்கும் ஈரான் ஒப்பந்தம்
ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு முக்கிய உறுதிமொழியை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு டிரம்ப் அளித்த உறுதிமொழி
ஈரான் விவகாரத்தில் முழுமையான தீர்வு காணப்படாமல் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வலியுறுத்தி இருப்பதாக அந்நாட்டின் தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அணுசக்தி திட்டத்தை தாண்டி, பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விரிவான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்துள்ளார்.

அந்த ஒப்பந்தத்தில், ஈரானின் ஆதரவுடன் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினை முடக்குதல் மற்றும் ஈரான் மேம்படுத்தி வரும் நவீன தொழில்நுட்ப ஏவுகணைகளின் பெருக்கத்தை தடுத்தல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தனியுரிமை
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டாலும், இஸ்ரேல் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனாலும், அதில் இஸ்ரேல் கையெழுத்து போட வேண்டும் என்ற அவசியம் இல்லை என தூதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும் இஸ்ரேல் தொடர்ந்து தங்களது தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதே சமயம் தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |