சீனாவுக்கு மற்றொரு அடிகொடுக்கும் ட்ரம்பின் திட்டம்: வெளியான தகவல்
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் விதிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க கப்பல் கட்டும் தொழில்
கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க கப்பல் கட்டும் துறையை முன்னேற்ற டொனால்ட் ட்ரம்ப்பின் அரசு, சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
50 டொலர்
அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு டன் சரக்குக்கு 50 டொலர் என்ற விகிதத்தில், இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என குறித்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இத்தகைய கட்டணங்களால் பொருள்களின் விலை அதிகரித்து அமெரிக்க நுகர்வோர்தான் பாதிக்கப்படுவார்கள். ஆனால் நாட்டு கப்பல் கட்டும் தொழிலை அது மேம்படுத்தாது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |