முடிவு செய்துவிட்ட ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவிக்கும் அமெரிக்கா
ஈரானில் இராணுவத் தாக்குதல்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் விரைவில் ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்ற நிலையில், அமெரிக்க இராணுவம் இந்த வார இறுதியில் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
ஜனாதிபதி அனுமதி
ஈரானுக்கு எதிராக ஒரு சாத்தியமான தாக்குதலைத் திட்டமிட்டுவரும் அமெரிக்க இராணுவம், சமீபத்திய நாட்களில் மத்திய கிழக்கில் ஆயுதங்களைக் குவித்து வந்துள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவே தகவல் கசிந்துள்ளது. இருப்பினும், இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு மன நிலையில் இருந்தாலும், ஈரானுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ஈரான் தொடர்பில் ஒரு முடிவெடுக்கும் பொருட்டு தமது நெருக்கமான வட்டாரத்திலும் இராணுவ ஆலோசகர்கள் மட்டத்திலும் ட்ரம்ப் கருத்துக் கோரியுள்ளார்.
ஆனால் ட்ரம்ப் எப்போது இறுதி முடிவை எடுப்பார் என்பது குறித்து உறுதியானத் தகவல் இல்லை. இந்த நிலையில், புதன்கிழமை கசிந்த தகவலில், ஈரானுக்கு எதிரான மிகப்பெரிய, வாரக்கணக்கான இராணுவ நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அனுமதி அளிக்கும் தருவாயில் உள்ளார், இது முழுமையான போராகக் கருதப்படும் என கூறப்பட்டது.
இஸ்ரேலின் அழுத்தத்தின் அடிப்படையில் ட்ரம்ப் முன்வைத்த அனைத்து அணுசக்தி திட்டங்களையும் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் நிராகரித்ததாகவே கூறப்படுகிறது.
இதனையடுத்தே இராணுவ நடவடிக்கை தொடர்பில் ட்ரம்ப் அனுமதி அளிக்கக் கூடும் என்ற தகவல் கசிந்தது. மேலும், அப்படியான ஒரு நடவடிக்கை ட்ரம்ப் முன்னெடுப்பார் என்றால், அது அலி காமெனியை உயிருடனோ அல்லது சடலமாகவோ மீட்கும் ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்றே கூறப்பட்டது.
மேலும், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இஸ்ரேலும் களமிறங்கும் என்றும் கூறப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்குப் பிறகு நடக்கவிருக்கும் மிகப்பெரிய இராணுவ படையெடுப்பாக இந்தப் போர் இருக்கும் என்றும், இது ட்ரம்பின் எஞ்சியுள்ள பதவி காலத்திற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

பெரும்பான்மையைப் பாதுகாக்க
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வரும் நிலையிலும், ஈரானுக்கு அருகே ட்ரம்ப் ஆயுதங்களைக் குவித்து வந்துள்ளார். இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள், ஒரு டசின் போர்க்கப்பல்கள் மற்றும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 150 இராணுவ சரக்கு விமானங்கள் அமெரிக்க மத்திய கிழக்கு தளங்களுக்கு ஆயுத அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை விரைவாக மாற்றத் தொடங்கியுள்ளன.
F-35s, F-22s மற்றும் F-16s உட்பட டசின் கணக்கான அமெரிக்க போர் விமானங்கள், சமீபத்திய நாட்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள தளங்களை விட்டு மத்திய கிழக்கு நோக்கிச் சென்றுள்ளன.
85க்கும் மேற்பட்ட எரிபொருள் கப்பல்களும் 170க்கும் மேற்பட்ட சரக்கு விமானங்களும் மத்திய கிழக்குப் பகுதிக்கு விரைந்துள்ளன. மட்டுமின்றி, குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையைப் பாதுகாக்க போராடி வரும் நிலையில்,

ட்ரம்ப் வெறும் ஒரு வாய்ச்சவடால் ஜனாதிபதியாக அறியப்படுவதைத் தவிர்க்கவும் ஈரானுடனான இந்தப் போரை அமெரிக்கா பயன்படுத்தக் கூடும்.
இதனிடையே, Hormuz நீரிணையை மூடிவிட்டு ஈரான் இராணுவப் பயிற்சிகளை துவங்கியுள்ளதை அடுத்தே, ட்ரம்பின் இராணுவ நடவடிக்கை ஆயத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |