ஈரானின் உச்ச தலைவர்... இஸ்ரேலின் அந்த ரகசிய திட்டம்: அடியோடு முடக்கிய ட்ரம்ப்
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல இஸ்ரேலின் ரகசிய திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மொத்தமாக முடக்கியதாக தகவல் கசிந்துள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளுடன்
அமெரிக்காவின் இரண்டு முதன்மை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் உறுதி செய்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஈரானியர்கள் ஏதேனும் அமெரிக்க பிரஜையை படுகொலை செய்ததாக இதுவரை தகவல் இல்லை. அவர்கள் அப்படியான ஒரு முடிவுக்கு வரும் வரையில், ஈரானின் உச்ச தலைவர் தொடர்பில் அமெரிக்கா எந்த முடிவும் எடுக்காது என்றே அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்ரேல் ஈரான் மீது பாரிய தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர் என்றே அந்த அதிகாரிகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
கொல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக
இஸ்ரேல் தரப்பில் இருந்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்ல வாய்ப்பு அமைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்பிடன் தெரிவித்ததாகவும், ஆனால் உடனடியாக அந்த முடிவைக் கைவிட ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் நேரிடையாக தமது முடிவை தெரிவித்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் அடிக்கடி தொடர்பு கொண்டு வருகிறார் என்பதை உறுதி செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |