ஹார்முஸ் ஜலசந்திக்கு போர் கப்பல்களை அனுப்பி வையுங்கள்: உலக நாடுகளிடம் டிரம்ப் கோரிக்கை
உலகின் எரிசக்தி விநியோகத்தை மீண்டும் உறுதிப்படுத்த விரும்பினால் உடனடியாக தங்கள் போர் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடல் உலகின் எரிசக்தி தேவையின் 20% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் நடவடிக்கை காரணமாக இந்த ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடியுள்ளது.

எச்சரிக்கையை மீறி ஹார்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் கப்பல்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கை உலக எரிசக்தி தேவையில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள் ஹார்முஸ் ஜலசந்திக்கு உடனடியாக போர் கப்பல்களை அனுப்பி வையுங்கள் என டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈரானின் ராணுவ பலம் 100% அழிக்கப்பட்டு விட்டதாகவும், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் போது ஒன்று அல்லது இரண்டு ஆளில்லா விமானங்களை ஏவி அல்லது கண்ணிவெடிகளை வெடிக்க செய்து ஈரான் மிரட்டலாம் அவ்வளவே.
எனவே இந்த செயற்கையான தடையால் பாதிக்கப்பட்ட சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரித்தானியா மற்றும் மற்ற பிற நாடுகள் ஹார்முஸ் ஜலசந்திக்கு உடனடியாக தங்கள் நாட்டு போர் கப்பலை அனுப்பி வைத்து, இனி ஒரு தேசத்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் அச்சுறுத்தல் இருக்காது என்று நம்புவோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |