அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்த விமான விபத்துகள்: டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ள புதிய காரணம்!
அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்துக்கான புதிய காரணத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார்.
விமான விபத்துக்கள்
அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த வார புதன்கிழமை, ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதிய விபத்தில், 67 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது 2001ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய மோசமான விமான விபத்தாக பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, பிலதெல்பியாவில் வெள்ளிக்கிழமையன்று, மருத்துவ ஜெட் விமானம் அல்லது ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்தப்படும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 6 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் அடுத்த விமான விபத்துக்கள் அரங்கேறிய நிலையில், இதற்கு அனைத்து பாலின பணியமர்த்தலே காரணம் என பேரழிவை சுட்டிக் காட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஜனாதிபதி டிரம்பின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
டிரம்பின் புதிய காரணம்
இந்நிலையில் அமெரிக்காவில் ஏற்பட்ட விமான விபத்துக்களுக்கு அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களால் பயன்படுத்தப்படும் “காலாவதியான கணினி அமைப்புகளே காரணம் என்று டொனால்ட் டிரம்ப் புதிய காரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பழைய கணினி அமைப்புகளை மாற்றி, கட்டுப்பாட்டு கோபுரங்களில் சிறந்த கணினிமயமாக்கப்பட்ட அமைப்புகள் பொருத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் சபதம் செய்துள்ளார்.
அத்துடன் முன்பு புதிய கணினி அமைப்புகளில் முதலீடு செய்வதற்கு பதிலாக இதுவரை பழைய கணினி அமைப்புகளை புதுப்பிக்க முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |