உடனடியாக அமெரிக்கா விசா பெறுவதற்கு டிரம்ப் அரசு புதிய திட்டம்
அமெரிக்கா விசாவை உடனடியாக பெறுவதற்கு, டிரம்ப் அரசு புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
அமெரிக்கா விசா
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறை பதவியேற்றதில் இருந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
குறிப்பாக, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வருகை தர உள்ள வெளிநாட்டவரின் விசா தொடர்பிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.
சமீபத்தில், 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததோடு, 7 நாடுகளைச் சேர்ந்தவர்களின் நுழைவிற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை விதித்துதுள்ளார்.
விரைவான விசா நடைமுறை
அதேவேளையில், அமெரிக்கா விசா தொடர்பான நேர்காணலுக்கு காத்திருப்பவர்கள், உடனடியாக நேர்காணலில் பங்குபெறும் வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளார்.
வழக்கமாக அமெரிக்க விசா பெற செயலாக்க கட்டணமாக 185 டொலர் செலுத்தி ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.
தற்போது முன்மொழிந்துள்ள புதிய நடைமுறைப்படி, 1000 டொலர் செலுத்தி வழக்கமான நேர்காணலுக்கான வரிசையை தவிர்த்து, விரைவாக விசா நேர்காணலில் கலந்து கொள்ள முடியம்.
சுற்றுலா மற்றும் குறுகிய கால பயண விசாவிற்கு இந்த நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், இந்த நடைமுறையில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருப்பதால், இந்த திட்டம் நிராகரிக்கப்படலாம் என சட்டநிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் 5 மில்லியன் டாலர் செலுத்தினால் அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.