1000 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில்.. - டிரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
காஷ்மீர் பிரச்சினையில் இரு நாடுகளுக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நேற்று போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், இரு நாடுகளும் சமரச பேச்சுக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனையடுத்து, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தன. ஆனால் அதன் பிறகும் பாகிஸ்தான் எல்லையில் சிறிய அளவில் அத்துமீறலில் ஈடுபட்டாலும் பெரியளவிலான தாக்குதல் நடைபெறவில்லை.
இதனையடுத்து, நாளை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்தையில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சினை
இது தொடர்பாக அவர் தனது truth social சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த ஆக்கிரமிப்பு பலரின் மரணத்திற்கும் அழிவிற்கும் வழிவகுத்திருக்கலாம். மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் இறந்திருக்கலாம்! உங்கள் துணிச்சலான செயல்களால் உங்கள் மரபு பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். விவாதிக்கப்படாவிட்டாலும், இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் நான் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன்.
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாகச் செய்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமைக்கு கடவுள் ஆசிர்வதிப்பாராக" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |