அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதல்: ISIS பயங்கரவாதிகளை குறி வைக்க டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பலர் கொல்லப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய சமூக ஊடக பதவில், தனது ஆணையின் பெயரில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் சோமாலியாவில் உள்ள குகையில் பதுங்கி இருந்த ISIS பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Truth Social சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “சோமாலியாவில் தாக்குதலுக்கு திட்டமிடும் மூத்த ISIS பயங்கரவாதிகள் மற்றும் ஆட்சேர்க்கும் பயங்கரவாத குழுவினரை குறிவைத்து துல்லியமான இராணுவ தாக்குதல் நடத்த இன்று காலை நான் உத்தரவிட்டேன்.”
அமெரிக்காவையும், நமது நட்பு நாடுகளையும் இந்த பயங்கரவாதிகள் அச்சுறுத்தி வந்தனர். எனவே அவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அவர்கள் பதுங்கியிருந்த குகைகள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த திடீர் வான்வழித் தாக்குதல் யாரையேனும் குறிவைத்து நடத்தப்பட்டதா? அல்லது தாக்குதலின் நோக்கம் வெற்றியடைந்ததா? என்பது போன்ற எந்தவொரு விளக்கமும் டிரம்ப் வழங்கவில்லை.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்த தகவலில்,அமெரிக்காவின் இந்த தாக்குதல் சோமாலிய அரசாங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.
பெண்டகனின் முதல் கட்ட தரவுகளின் படி, இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |