பைடன் கொல்லப்பட்டுவிட்டார்; தற்போது உள்ளது க்ளோன் - சர்ச்சையை கிளப்பும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைத்தள பக்கத்தில் முன்னாள் அதிபர் ஜோ பைடன் குறித்து பகிர்ந்துள்ள பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் பகிர்ந்த பதிவால் சர்ச்சை
ஜோ பைடன் 2020 ஆம் ஆண்டே கொல்லப்பட்டு விட்டார். தற்போது நீங்கள் பார்ப்பது க்ளோன்கள் மற்றும் ரோபோவால் உருவாக்கப்பட்ட ஆன்மா இல்லாத, மனம் இல்லாத உயிரினம். ஜனநாயக வாதிகளுக்கு வித்தியாசம் தெரிவதில்லை " என ட்ரூத் சோசியல் பயனர் ஒருவரின் பதிவை டிரம்ப் ஷேர் செய்துள்ளார்.
ஆதாரமில்லாத இது போன்ற சதிக்கோட்பாடு வகையிலான பதிவை, அமெரிக்கா அதிபர் டிரம்ப் பகிர்ந்தற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி வகித்த போதே அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியானது.
சிறுநீரக தொற்று அறிகுறி காரணமாக அவர் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்ட போது, அவருக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
அது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், பைடன் விரைவாக குணமடைய வேண்டும் என கூறியதோடு, அவரின் உடல்நிலை குறித்த விவரங்களை தாமதமாக தெரியப்படுத்தியதாக அவரது குடும்பத்தை குற்றஞ்சாட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |