ட்ரம்பின் வரிவிதிப்புகள்: தற்காலிகமாக தப்பிய பிரித்தானியா
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமியம் மீதான வரிகளை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.
ஆனாலும், பிரித்தானியாவுக்கு மட்டும் அந்த வரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் வரிவிதிப்புகள்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமியம் மீது 25 சதவிகித வரி விதித்திருந்த நிலையில், தற்போது அந்த வரிகளை 50 சதவிகிதமாக உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
அதே நேரத்தில், பிரித்தானியா மட்டும் 25 சதவிகித வரிகளை செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், ட்ரம்பின் இந்த முடிவு தற்காலிகமானதுதான்.
பிரித்தானியா, கடந்த மாதம், அதாவது. மே மாதம் 8ஆம் திகதி, அமெரிக்காவுடன் US-UK Economic Prosperity Deal (EPD) என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆகவேதான் பிரித்தானியா மட்டும் வரி உயர்விலிருந்து தப்பியுள்ளது.
என்றாலும், பிரித்தானியா EPD ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அம்சங்களை சரியான முறையில் பின்பற்றவில்லை என அமெரிக்கா தீர்மானிக்கும்பட்சத்தில், ஜூலை மாதம் 9ஆம் திகதிக்குப் பிறகு பிரித்தானியா மீதான வரிகளையும் அமெரிக்கா அதிகரிக்கக்கூடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |