வடகொரியா மீது அணு ஆயுத தாக்குதலை திட்டமிட்ட அமெரிக்க ஜனாதிபதி: வெளிவரும் புதிய தகவல்
வட கொரியா மீது அணு ஆயுத தாக்குதலை முன்னெடுத்துவிட்டு, வேறு நாட்டின் மீது பழியைப் போட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக அழித்துவிடுவோம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொது இடங்களில் கருத்து தெரிவித்ததை விட, தனிப்பட்ட சந்திப்புகளில் வடகொரியாவை அதிக நெருக்கடிக்கு உ:ள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
@getty
2017 காலகட்டத்தில் வட கொரியா மற்றும் அமெரிக்கா உறவு என்பது ஆபத்தான சூழலில் இருந்தது. மட்டுமின்றி, அமெரிக்காவின் நட்பு நாடுகளை வட கொரியா சீண்டினால் மொத்தமாக அழித்துவிடுவோம் என ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ட்ரம்ப் கோபமடைந்ததும் புதிதாக வெளியாகவிருக்கும் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட கொரியா மீது அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என தமது முதன்மை அலோசகர்களுடனான சந்திப்பில் ட்ரம்ப் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, வட கொரியா மீது போர் தொடுக்கவும் ட்ரம்ப் அப்போது தயாரான மன நிலையில் இருந்ததாக கூறுகின்றனர்.
வட கொரியா மீது அமெரிக்கா ஒருபோது அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்ற நம்பிக்கையை சாதகமாக பயன்படுத்தவும், அந்த பழியை வேறு நாடுகள் மீது போட வேண்டும் எனவும் ட்ரம்ப் ஆலோசனை கூறியுள்ளார்.
@AFP
ராணுவ மோதல் ஏற்படும் சூழல்
ஆனால் அவ்வாறான திட்டம் ஒருபோதும் பலனளிக்காது என ஜெனரல் ஜான் கெல்லி மொத்தமாக நிராகரித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் நம் மீது சந்தேகம் எழாது என்பதை உறுதி கூற முடியாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அத்துடன் ட்ரம்பின் தொடர் மிரட்டல் உள்ளிட்டவை ராணுவ மோதல் ஏற்படும் சூழலுக்கு கொண்டு சென்றதாக அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@AP
வட கொரியா மேலும் வாலாட்டினால், இந்த உலகம் இதுவரை சந்தித்திராத உக்கிரத்தை அவர்கள் எதிர்கொள்வார்கள் என ட்ரம்ப் தமது கோல்ஃப் கிளப்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் உட்பட முக்கிய தலைவர்களை நேரில் சந்திக்கவும் அவர் தயாரானார் என்றே கூறுகின்றனர்.