காஸா போர் நிறுத்தத்தை அறிவிக்கவிருக்கும் ஜனாதிபதி ட்ரம்ப்: உறுதி செய்த அதிகாரிகள்
காஸாவில் போரை முடிந்தவரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸா போர் நிறுத்தம்
வெளியான தகவல்களின் அடிப்படையில் அடுத்த சில நாட்களில் காஸா போர் நிறுத்தம் தொடர்பில் ட்ரம்ப் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. செய்தியாளர்களிடம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில்,
காஸா போரை நிறுத்த முடியுமா என்று பார்க்க விரும்புகிறோம். நாங்கள் இஸ்ரேலுடன் பேசியுள்ளோம், இந்த முழு சூழ்நிலையையும் விரைவில் நிறுத்த முடியுமா என்று பார்க்க விரும்புகிறோம் என்றார்.
இந்த நிலையிலேயே, அடுத்த சில நாட்கலில் காஸா போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் அறிவிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட ஒரு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பும் ட்ரம்பால் வெளியிடப்படும் என சில வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. மட்டுமின்றி, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமானப் பொருட்களை மூன்று மாதங்களாகத் தடுத்து நிறுத்திய அதே நேரத்தில், சர்வதேச கண்டனத்தையும் இஸ்ரேல் எதிர்கொண்டு வருகிறது.
அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள்
இதனிடையே, இடம்பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்து வந்த அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் மீது இஸ்ரேல் இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது, இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலின் மிருகத்தனமான போக்கை முடிவுக்குக் கொண்டுவர அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேற்று சந்தித்தன, அதே நேரத்தில் இஸ்ரேல் மீது ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக போர் நிறுத்தம் கோரிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் மற்றும் கனடா தலைவர்கள் ஹமாஸுக்கு ஆதரவாக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |