கெட்டது நடக்கும்- ட்ரம்ப் எச்சரிக்கை: ஈரானுக்கு 10 நாள் அவகாசம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரான் தனது அணு திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை 10 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இல்லையெனில் “கெட்ட விடயங்கள் நடக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மத்திய கிழக்கில் பெரும் அளவில் இராணுவத்தை குவித்துள்ளது. இது பெரிய போர் வெடிக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் நன்றாக நடந்து வருவதாக கூறியுள்ள ட்ரம்ப், ஈரான் அர்த்தமுள்ள (meaningful) ஒப்பந்தத்தை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

“அணு ஆயுதம் ஈரானுக்கு இருக்கக்கூடாது. அது இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது அணு திட்டம் அமைதிக்கானது மட்டுமே என்று கூறினாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அது அணு குண்டு தயாரிப்புக்கான முயற்சி என குற்றம் சாட்டுகின்றன.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானின் அணு நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்களை தாக்கியிருந்தன.
தற்போது ஈரான், ரஷ்யாவுடன் இணைந்து ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சிகளை நடத்தி வருகிறது.
சர்வதேச எதிர்வினைகள்
ரஷ்யா, “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளது” என்று எச்சரித்து, அமைதியை வலியுறுத்தியுள்ளது.
போலந்து தனது குடிமக்களை ஈரானை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, பிப்ரவரி 28 அன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து ஈரான் பிரச்சினையை விவாதிக்க உள்ளார்.
ட்ரம்ப் வழங்கிய 10 நாள் அவகாசம், உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது அணு திட்டத்தில் தளர்ச்சி காட்டுமா அல்லது அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுப்பதா என்பது அடுத்த சில நாட்களில் வெளிப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |