பிரபல நாட்டில் பிரதமர் பதவிநீக்கம்! ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு
நேற்று நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் வெடித்ததை அடுத்து, துனிசியாவின் ஜனாதிபதி, பிரதமரை பதவி நீக்கம் செய்து நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்துள்ளார்.
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில், அரசாங்கம் கோவிட்-19ஐ தவறாக கையாண்டதில் கோபமடைந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள், ஆர்ப்பாட்டக்காரர்களாக மாறி தெருக்களில் இறங்கி பொலிஸாருடன் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கைஸ் சையத் (Kais Saied) முற்றிலுமாக பொறுப்பேற்பதாக அறிவித்தார்.
அவரது ஆதரவாளர்கள் இதனை கொண்டாடினர், ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்தரப்பில் உள்ளவர்கள் இது ஒரு சதித்திட்டம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அவசரகால பாதுகாப்பு கூட்டத்திற்குப் பிறகு, சையத் ஒரு தொலைக்காட்சி உரையில் பேசியபோது, "நாங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளோம். சமூக அமைதி துனிசியாவிற்கு திரும்பும் வரை மற்றும் நாங்கள் அரசைக் காப்பாற்றும் வரை இத முடிவு நீடிக்கும்., பிரதமர் ஹிச்செம் மெச்சிச்சி (Hichem Mechichi) பணிநீக்கம் செய்யப்பட்டார்" என்ற செய்தியை வெளியிட்டார்.