துருக்கியில் 200க்கும் மேற்பட்டோர் கைது: நேட்டோ உச்சி மாநாட்டிற்காக எர்டோகன் அரசு அதிரடி
நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக துருக்கியில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியில் நேட்டோ உச்சி மாநாடு
அடுத்த மாதம் ஜூலை 7ம் திகதி மற்றும் 8ம் திகதிகளில் துருக்கி தலைநகர் அங்காராவில் நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உட்பட நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் துருக்கி தலைநகர் அங்காராவிற்கு வரவுள்ளதை அடுத்து அந்நாட்டு அரசு தனது பாதுகாப்பை பல மடங்கு தீவிரப்படுத்தியுள்ளது.

200க்கும் மேற்பட்டோர் கைது
நேட்டோ உச்சி மாநாட்டை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக துருக்கியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியின் தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, மொத்தம் 241 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது..
அதில் தற்போது வரை 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களையும் விரைவில் கைது செய்ய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 56 பேர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், 35 பேர் DHKP-C என்ற கம்யூனிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாட்டில் சந்தேகத்திற்குரிய நபர்களாக கருதப்படுபவர்களை கைது செய்ய துருக்கிய அதிகாரிகள் விரிவான சோதனையை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |