அகதிகள் முகாம் மீது குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்! வெளியான பரபரப்பு காட்சி
ஈராக்கில் உள்ள அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு ஈராக்கில் உள்ள Makhmour முகாமுக்கு அருகே இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
துருக்கி போர் விமானங்கள் இந்த வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என Patriotic Union of Kurdistan (PUK) துணைத் தலைவர் Rashad Galali தெரிவித்துள்ளார்.
1990 களில் துருக்கியிலிருந்து தப்பி ஓடிய 12,000க்கும் மேற்பட்ட குர்திஷ் அகதிகள் Makhmour முகாம் தங்கியிருக்கின்றனர்.
Makhmour முகாம், ஈராக் தலைநகர் எர்பில் மற்றும் ஈராக் தலைநகர் பாக்தாத் இடையே உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் அமைந்துள்ளது.
கடந்த புதன்கிழமை துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan, தங்களுடைய அடுத்து குறி Makhmour முகாம் என எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
🇮🇶
— Momchil Ilker Ivanov (@momchil_ivanov1) June 5, 2021
🔴SİHA'ların Mahmur Kampı'na hava saldırısı düzenlemesinin ardından bölgeden görüntüler.
🔴A video of scene in Makhmour Camp after Turkish UCAVs airstrike. pic.twitter.com/kcTW5j4eM6
எனினும், இத்தாக்குதல் தொடர்பில் துருக்கி தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.