இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம்

India Turkey Operation Sindoor
By Karthikraja Jun 17, 2026 01:52 PM GMT
Report

இந்திய அரசின் நடவடிக்கையால், ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்ததாக விமான நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி

துருக்கியை தளமாக கொண்ட செலேபி ஏவியேஷன், டெல்லி உள்ளிட்ட 9 முக்கிய விமானப் போக்குவரத்து மையங்களில் முக்கிய விமான நிலைய உள்கட்டமைப்பை நிர்வகித்து வந்தது. 

இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம் | Turkey Celebi Aviation Lost 4700Cr In Day In India

இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 58,000 விமானங்களையும் 5,40,000 டன் சரக்குகளையும் கையாண்டது. 

கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான 4 நாட்கள் மோதலின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததோடு இந்தியா மீதான தாக்குதலுக்கு ட்ரோன் உள்ளிட்ட ராணுவ உதவிகளை வழங்கியது.

இதனையடுத்து, துருக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உள்ள தொடர்புகளையும் இந்தியா துண்டித்தது. 

படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல்

படித்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.7,000 கோடி நன்கொடை - வாரி வழங்கிய டெல்

பாதுகாப்பு காரணங்களை கூறி, செலேபி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை இந்திய அரசு ரத்து செய்தது.

ஒரே நாளில் ரூ.4,700 கோடி இழப்பு

இதனால், ஒரே நாளில் தங்களது நிறுவனம் ரூ.4,700 கோடி இழப்பை சந்தித்தாக செலேபி தலைவர் கனன் செலபியோக்லு (Canan Çelebioğlu) கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "2025 மே மாதத்தில் இந்தியா எடுத்த முடிவு நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் வேதனையான அத்தியாயங்களில் ஒன்று. 

இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம் | Turkey Celebi Aviation Lost 4700Cr In Day In India

எங்களிடம் இருந்த அனைத்து உபகரணங்களும், அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் எங்களை அங்கிருந்து அகற்றினர். ஒரே நாளில் எங்கள் 10,000 ஊழியர்களை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றினர். நாங்கள் உருவாக்கிய சுமார் 400 - 500 மில்லியன்டொலர் மதிப்பிலான சொத்தையும் ஒரே நாளில் பூஜ்ஜியமாக்கியது.

பண மதிப்பை ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள். அது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்ட ஓர் இடம். நாங்கள் அந்தத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தோம். நாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினோம். நாங்கள் பெருமளவில் முதலீடு செய்தோம். இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தமளித்தது. நான் இந்தியாவின் தீவிர ரசிகை. இந்தியா எங்களுக்கு 2வது தாய் வீடு போல் மாறியிருந்தது" என பேசியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US