இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம்
இந்திய அரசின் நடவடிக்கையால், ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்ததாக விமான நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த துருக்கி
துருக்கியை தளமாக கொண்ட செலேபி ஏவியேஷன், டெல்லி உள்ளிட்ட 9 முக்கிய விமானப் போக்குவரத்து மையங்களில் முக்கிய விமான நிலைய உள்கட்டமைப்பை நிர்வகித்து வந்தது.

இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 58,000 விமானங்களையும் 5,40,000 டன் சரக்குகளையும் கையாண்டது.
கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான 4 நாட்கள் மோதலின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததோடு இந்தியா மீதான தாக்குதலுக்கு ட்ரோன் உள்ளிட்ட ராணுவ உதவிகளை வழங்கியது.
இதனையடுத்து, துருக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் உள்ள தொடர்புகளையும் இந்தியா துண்டித்தது.
பாதுகாப்பு காரணங்களை கூறி, செலேபி நிறுவனத்திற்கான பாதுகாப்பு அனுமதியை இந்திய அரசு ரத்து செய்தது.
ஒரே நாளில் ரூ.4,700 கோடி இழப்பு
இதனால், ஒரே நாளில் தங்களது நிறுவனம் ரூ.4,700 கோடி இழப்பை சந்தித்தாக செலேபி தலைவர் கனன் செலபியோக்லு (Canan Çelebioğlu) கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "2025 மே மாதத்தில் இந்தியா எடுத்த முடிவு நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் வேதனையான அத்தியாயங்களில் ஒன்று.

எங்களிடம் இருந்த அனைத்து உபகரணங்களும், அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் எங்களை அங்கிருந்து அகற்றினர். ஒரே நாளில் எங்கள் 10,000 ஊழியர்களை மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றினர். நாங்கள் உருவாக்கிய சுமார் 400 - 500 மில்லியன்டொலர் மதிப்பிலான சொத்தையும் ஒரே நாளில் பூஜ்ஜியமாக்கியது.
பண மதிப்பை ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள். அது படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்ட ஓர் இடம். நாங்கள் அந்தத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தோம். நாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றினோம். நாங்கள் பெருமளவில் முதலீடு செய்தோம். இது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இது உண்மையிலேயே எங்களுக்கு வருத்தமளித்தது. நான் இந்தியாவின் தீவிர ரசிகை. இந்தியா எங்களுக்கு 2வது தாய் வீடு போல் மாறியிருந்தது" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |