துருக்கியில் மொத்தம் எத்தனை இலங்கையர்கள் வசிக்கின்றனர்? இலங்கை பெண்ணின் செல்போன் கண்டுபிடிப்பு
துருக்கியில் தோராயமாக 270 இலங்கையர்கள் வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
270 இலங்கையர்கள்
துருக்கியின் காஜியன்டப் நகரை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவானது. இந்த பூகம்பத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
பெரிய பூகம்பத்தை தொடர்ந்து துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து 312 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அலகில் 4 முதல் 7.5 வரை பதிவாகியுள்ளது. இதுவரையில் நிலநடுக்கத்தால் 7000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலின்படி துருக்கியில் 270 இலங்கையர்கள் வசிப்பதாக இலங்கை தூதுவர் ஹசந்தி திஷனாயகே தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் மையப் பகுதியில் இருந்த பல்கலைக்கழக மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
AFP Photo
இலங்கை பெண்ணின் தொலைபேசி
இதனிடையில் இலங்கை பெண்ணின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது எனினும் குறித்த பெண் தொடர்பான எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் தங்கியிருந்த கட்டடம் நிலநடுக்கத்தில் சேதமடைந்துள்ளதாக இதற்கு முன்னர் தகவல் கிடைத்த நிலையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்கள் குறித்த கட்டத்தில் இருந்து வௌியேறியுள்ளதாகவும் பின்னர் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
GETTY