100ற்கு மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய பாரிய நிலநடுக்கம்! உயிரழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம்.. அச்சத்தில் மக்கள்
துருக்கி மற்றும் சிரியாவில் உணரப்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது.
துருக்கியில் 900 ற்கும் மேற்பட்டவர்களும் சிரியாவில் 470 ற்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
துருக்கியில் ஆயிரத்து 700 ற்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்துவீழ்ந்துள்ள நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
துருக்கியிலுள்ள 10 நகரங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லூ குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இங்குள்ள 2,200 ஆண்டுகள் பழமையான கஸியன்டெப் கோட்டை கடுமையான சேதங்களை உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.