தாயகம் காக்க போராடுபவர்கள் அவர்கள்: சலசலப்பை ஏற்படுத்தும் துருக்கி ஜனாதிபதியின் கருத்து
பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல, மாறாக தனது நிலத்தைப் பாதுகாப்பதற்காக போராடும் ஒரு விடுதலைக் குழு என வெளிப்படையாக தெரிவித்துள்ளார் துருக்கி ஜனாதிபதி.
இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து
துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவிக்கையில், பாலஸ்தீன மக்களின் நிரந்தர அமைதிக்காக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
@reuters
துருக்கி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், துருக்கியின் நல்ல நோக்கத்தை இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டது. மட்டுமின்றி, இஸ்ரேல் செல்ல முன்னர் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த முடிவை தாம் தற்போது மாற்றிக்கொண்டதாகவும் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் படைகளுக்கு இடையே உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், உலக வல்லரசு நாடுகள் தலையிட்டு இஸ்ரேலின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
@afp
மேலும், மனிதாபிமான உதவிகளுக்காக ராஃபா எல்லை திறந்தே வைத்திருக்க வேண்டும் எனவும் எர்டோகன் கோரிக்கை வைத்துள்ளார். மட்டுமின்றி, இஸ்ரேல் - ஹமாஸ் போரை தடுத்து நிறுத்த இதுவரை ஐக்கிய நாடுகள் மறத்திற்கு முடியாமல் போனதில் தமது ஏமாற்றத்தையும் எர்டோகன் பதிவு செய்துள்ளார்.
@getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |