இந்தக் கொடூரங்களை உடனடியாக நிறுத்துக... இஸ்ரேலை எச்சரித்த துருக்கி ஜனாதிபதி
பாலஸ்தீன பகுதிக்குள் இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள நிலையில், இந்தப் பைத்தியக்காரத்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேலுக்கு துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
பைத்தியக்காரத்தனத்தை கைவிட்டு
காஸா பகுதியில் உக்கிரமான தாக்குதலை முன்னெடுத்துவரும் இஸ்ரேல், மீண்டும் பெண்கள், சிறார்கள் என அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதாக எர்டோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
@idf
இந்தப் பைத்தியக்காரத்தனத்தை கைவிட்டு தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என்றார் எர்டோகன். அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தொடுத்த தாக்குதலுக்கு பின்னர், தரை வழியான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாரெடுத்து வருகிறது.
அதற்கு முன்னோட்டமாக காஸா மீது உக்கிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதனால் காஸா பகுதியில் பலி எண்ணிக்கை நாளும் அதிகரித்து வருகிறது.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், பாலஸ்தீன மக்களின் பலி எண்ணிக்கை 7,300 கடந்துள்ளதாகவே கூறப்படுகிறது. கொல்லப்பட்டத்தில் 3,000 பேர் சிறார்கள் என்றே கூறப்படுகிறது.
@idf
இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக
துருக்கியில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றையும் எர்டோகன் முனெடுத்துள்ளார். இதில் சுமார் 1 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுடன் இணைந்து நிற்கிறோம் என்பதை உரத்த குரலில் அறிவிப்போம் என எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இரண்டு தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து வரும், எர்டோகன் பலமுறை பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்,
@getty
ஆனால் கடந்த ஆண்டு அவர் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை மீட்டெடுக்கவும், செப்டம்பரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை முதல் முறையாக சந்திக்கவும் செய்தார்.
ஆனால் தற்போது இஸ்ரேல் பயணத்தை மொத்தமாக ரத்து செய்துள்ள எர்டோகன், காஸா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுப்பது மனிததன்மையற்ற செயல் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டுமின்றி, ஹமாஸ் படைகள் தாயகம் காக்க போராடும் குழு என்றும் தீவிரவாத அமைப்பு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |