ஆசிய நாடொன்றிற்கு அதி நவீன போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் துருக்கி
துருக்கியில் தயாரிக்கப்பட்ட 48 போர் விமானங்களை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அந்த நாடு ஒப்புக் கொண்டுள்ளது.
துருக்கியின் பாதுகாப்புத் துறை
குறித்த தகவலை துருக்கி ஜனாதிபதி எர்டோகன் புதன்கிழமை அறிவித்துள்ளார். இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய, பிரபலமான Bayraktar ட்ரோன்கள் உட்பட துருக்கியின் பாதுகாப்புத் துறை, நாட்டின் ஏற்றுமதி வருவாயில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் எர்டோகன் தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், நமது நட்பு மற்றும் சகோதர நாடான இந்தோனேசியாவுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 48 கான் போர் விமானங்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டு இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என பதிவு செய்துள்ளார்.
கான் போர் விமானங்கள்
ஐந்தாம் தலைமுறை கான் போர் விமானங்களை துருக்கியின் வான்வெளித் தொழில்துறை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இந்தோனேசியாவின் உள்ளூர் திறன்களும் கான் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் என துருக்கி அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் விமானம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் அவர்கள் வெளியிட மறுத்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில், துருக்கியின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி வருவாய் 7.1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியது, இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 1.6 பில்லியன் டொலர் அதிகமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |