ஜேர்மனி, கனடா, பிரான்ஸ் தூதர்களை வெளியேற்றுவோம்: துருக்கிய அதிபர் பகிரங்க எச்சரிக்கை!
துருக்கி நாட்டின் அதிபர் ரிசப் தய்யிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) 10 மேற்கத்திய நாடுகளின் தூதர்களை வெளியேற்றப் போவதாக எச்சரித்துள்ளார்.
துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வர்த்தகர், செல்வந்தர் ஒஸ்மான் கவாலாவை (Osman Kavala) விடுதலை செய்யுமாறு அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கவாலா விவகாரத்தில் துரிதமாகவும் நியாயமாகவும் முடிவெடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
அரசதந்திரிகளுக்கு எதிரான இந்த எச்சரிக்கை அவர்கள் நாட்டில் தொடர்ந்து இருப்பதைத் தடை செய்வதைக் குறிக்கிறது. இருப்பினும் அவர்கள் துருக்கியைவிட்டு வெளியேறக் காலக்கெடு ஏதும் விதிக்கப்படவில்லை.
அவர்களில் டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, ஸ்வீடன், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்களும் அடங்குவர்.
Picture: Reuters
அதிபர் ரிசப் தய்யிப் எர்துவான் விடுத்துள்ள இந்த ஏச்சரிக்கை, மேற்கத்திய நாடுகளுக்கும் துருக்கிக்கும் இடையிலான பிளவை மேலும் சிக்கலாக்கக்கூடும் என கூறப்படுகிறது.
துருக்கிய அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்றது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் நான்கு ஆண்டுகளாக கவாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.