துருக்கி ராணுவம் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியதா? உண்மை என்ன
ஐக்கிய நாடுகள் சபையும் இஸ்லாமிய நாடுகளும் காசா தொடர்பில் தெளிவான முடிவெடுக்க வேண்டும் என துருக்கி கோரிக்கை வைத்துள்ளது.
இந்த நிலையில், துருக்கி ராணுவம் இஸ்ரேலுக்கு எதிராக காசாவில் களமிறங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் தகவல் ஒன்று தீயாக பரவியது.
குறித்த தகவலுடன் மூன்று புகைப்படங்களும், காசாவுக்கு விடுதலை பாலாஸ்தீனத்துக்கு விடுதலை என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த புகைப்படங்கள் தவறாக பரப்பப்படுவதாகவும், துருக்கி ஜனாதிபதி இராஜாங்க முறைப்படி பேச்சுவார்த்தையினூடே இஸ்ரேல் காசா பிரச்சனை முடிவை எட்ட வேண்டும் என விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி துருக்கி தனது படைகளை இதுவரை காசாவுக்கு அனுப்பவில்லை எனவும், சமூக ஊடகங்களில் தீயாக பரவும் புகைப்படங்களில் ஒன்று ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமானது எனவும், மே 4ம் திகதி மாஸ்கோவில் முன்னெடுக்கப்படும் வெற்றி நாள் அணிவகுப்பிற்கான ஒத்திகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும் தெரிய வந்துள்ளது.
இரண்டாவது புகைப்படம் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் 2020 செப்டம்பர் மாதம் பதிவு செய்த புகைப்படம் அது என தெரிய வந்துள்ளது.
3-வது புகைப்படம் தென்கிழக்கு துருக்கியின் குர்திஷ் பகுதியில் துருக்கிய இராணுவம் ரோந்து பணியில் ஈடுபடும் காட்சி என கூறப்படுகிறது.
இதனால், காசாவில் துருக்கி ராணுவம் களமிறங்கியுள்ளதாக இணையத்தில் பரவும் தகவல் போலி என உறுதி செய்யப்பட்டுள்ளது.