உயிரை மாய்த்துக்கொண்ட இளம் சீரியல் நடிகை - வைரலாகும் கடைசி பதிவு
இளம் சீரியல் நடிகை சஞ்சிதா உயிரை மாய்த்துள்ள நிலையில் அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
சஞ்சிதா உகலே
கும்கும் பாக்யா, தில்வாலி துல்ஹா லே ஜாயேகி உள்ளிட்ட இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சிதா உகலே(sanchita ugale).

நேற்று இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள், மகாராஷ்டிராவின் நாலசோபாரா கிழக்கில் உள்ள தனது வீட்டில் தனது படுக்கையறைக்குள் தன்னைத் தானே பூட்டிக்கொண்டு, ஒரு சேலையைப் பயன்படுத்தி மின்விசிறியில் தூக்கிட்டுத் உயிரை மைத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்களும் அண்டை வீட்டாரும், உடனடியாக அவரை வசாய்-விரார் நகராட்சி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும்போதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அவரது தந்தை மச்சிந்திர உகலே அளித்த புகாரின் அடிப்படையில், அச்சோல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பயணம், உடற்பயிற்சி மற்றும் யோகாவிலும் ஆர்வம் உள்ள சஞ்சிதா, அது தொடர்பான பல்வேறு பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சஞ்சிதா உகலேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.43 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, 1979 ஆம் ஆண்டு வெளியான 'சர்கம்' திரைப்படத்தின் 'டஃப்லி வாலே டஃப்லி பஜா' பாடலுக்கு உதட்டசைக்கும் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.
இவ்வளவு மகிழ்ச்சியாக உள்ள ஒருவர், எப்படி சில மணி நேரங்களில் உயிரை மாய்துகொண்டுள்ளார் என ரசிகர்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அவருடன் நடித்த படக்குழுவினர் சஞ்சிதாவின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |