காபூலில் தலிபான்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்! நடத்தியது யார்?
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெவ்வேறு இடங்ளில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு காபூலின் மாவட்டம் 13-ல் உள்ள Dasht-e-Barchi பகுதியில் முதல் குண்டு வெடித்ததாகவும், இதில் பல காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Dasht-e-Barchi-ல் IED மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, கார் ஒன்றில் வெடி குண்டு பொருத்தப்பட்டு, அது வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த போது குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது குண்டுவெடிப்பு அதே மாவட்டத்தின் Jalalabad பகுதியில் நடந்தததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Jalalabad பகுதியில் தலிபான் வாகனம் குறிவைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் தற்போது வரை தகவல் ஏதும் வெளியாகிவில்லை.
#BREAKING
— Tehran Times (@TehranTimes79) September 18, 2021
The second explosion today in Kabul: A Taliban vehicle was targeted and detonated in the Jalalabad area. Not yet any report of casualties and claims of responsibility . https://t.co/YL9Bfmfm4H
இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்(கே) பயங்கரவாதிகள் இத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில், இந்த பகுதிகளில் ஒரு காலகட்டத்தில் ஐ.எஸ்(கே) கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.