துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு! 2 பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை துபாய் சர்வதேச விமைான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டுளள்ளது. FlyDubai மற்றும் Gulf Air விமானங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இரண்டு விமானங்களும் ஓடுபாதைக்கு செல்லும் சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் FlyDubai விமானத்தின் இறக்கையும், Gulf Air விமானத்தின் வால் பகுதியும் சேதடைந்ததாக அந்நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
என்ன நடந்தது என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விபத்தால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை ஒன்று சுமார் 2 மணி நேரத்திற்கு மூடப்பட்டதால், விமான போக்குவரத்தில் சற்று இடையூறு ஏற்பட்டது.